BREAKING

BREAKING NEWS பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு யாரையும் தேர்வு எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை தேர்வு வேண்டுமென்பதும் நம்முடைய நிலைப்பாடு அல்ல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பணியில் இருப்பவர்கள் பணியில் இல்லாதவர்கள் தகுதி தேர்வு எழுத விண்ணப்பிக்கிறார்கள் விண்ணப்பிப்பவர்கள் இணையதளம் முடங்கியதால் கால அவகாசம் கேட்கிறார்கள். அதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம் யாரையும் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக இந்த கோரிக்கை வைக்கவில்லை. கோரிக்கையை தெளிவாக படித்து புரிந்து கொள்ளுங்கள் கோரிக்கையை தவறாக புரிந்து கொண்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் தமிழ்நாட்டுக்கான பிரச்சனை இல்ல அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய அரசு பள்ளி /அரசு உதவி பெறும் பள்ளி/ மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களின் பிரச்சினை அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் பணியில் இருக்கும் எந்த ஒரு ஆசிரியருக்கு கூட கடுகளவு பாதிப்பு ஏற்படாது இதை அரசும் அமைச்சரும் தெளிவாக தெரிவித்துள்ளார்கள் இது சட்ட ரீதியான பிரச்சனை உச்ச நீதிமன்றம் அமர்வு அளித்துள்ள தீர்ப்பு அதை சட்டரீதியாக நுணுக்கமாக அணுக வேண்டியுள்ளது. அவரவர் விருப்பத்திற்கும் அவரவருடைய எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட இயலாது ஆகவே அதை புரிந்து கொண்டு செயல்படுவது தான் சரியாக இருக்கும் வாட்ஸ் அப்பில் வரக்கூடிய செய்திகளை பார்த்து ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்குவதும் அனைவரையும் பாதுகாப்பதுவுமே இயக்கத்தின் கடமை

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் டெட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

Saturday, 5 July 2025

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா 



தாராபுரத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட சிறப்பு பொதுக்குழு மற்றும் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா தாராபுரம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மற்றும் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட தலைவர் ந. சிவகுமார் தலைமை வகித்தார் தாராபுரம் வட்டார செயலாளர் ஆர் ரகு வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் பி இளங்குமரன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில துணை பொதுச் செயலாளர் சோ. சந்திரசேகரன்,  மாநில தலைவர் கே தங்கவேலு ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நடப்பாண்டிற்கான புதிய நிர்வாகிகள் 1. மாவட்ட செயலாளராக திரு ஜெயபாலன் அவர்கள் 2. மாவட்ட ஊடக செயலாளராக திரு மாரிமுத்து அவர்கள் 3. மாவட்ட துணை தலைவராக திரு அந்தோணி ராஜ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் முனைவர் பி. பேட்ரிக் ரெய்மாண்ட் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் பொட்டிக்கம்பாளையம் ச நீலாவதி, கெத்தல் ரேவ் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சாந்தி . என் சி பி பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சுப்பிரமணியன். சங்கராத்தாள். கெத்தல் ரேவ் அரசு உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட பொருளாளர் நா. பால்ராஜ் ஒருங்கிணைத்தார். 
மாவட்ட செயலாளர் ஜெயபாலன் நன்றி கூறினார்.



























ஊடகப்பிரிவு மற்றும் தொழில்நுட்பப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

QR CODE GENARETOR

9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUST Examination)அறிவிப்பு வெளியீடு!!!

9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUST Examination)அறிவிப்பு வெளியீடு!!! Trust Exam Notification ஊடகப்பிரிவு ...

Nmms class

https://linktr.ee/solliadi