*முதல் அறிவிப்பாக சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வு கமிட்டியில் அந்தந்த கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அரசாணையில் கையெழுத்து விட்டு வந்ததாக மனிதநேய மகத்துவ கிறிஸ்தவ பெருவிழாவில் முதலமைச்சர் அறிவிப்பு* மேலும்
*மூன்றாவது அறிவிப்பாக*
*ஆசிரியர் தகுதித் தேர்வு பிரச்சனையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சந்திக்கின்ற சிரமங்களைப் பற்றி என்னிடம் நேரடியாக கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினேன். அதைத் தொடர்ந்து, அரசு வழக்கு விசாரணையை நீட்டிப்பதற்குப் பதிலாக, இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்றோம்.*
*இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, TET தேர்வு தொடர்பான அரசியலமைப்புச் சட்ட கேள்வி குறித்து, மாண்பமை உச்ச நீதிமன்றம் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆராய உத்தரவிட்டிருக்கிறது. இந்த அணுமுறையால், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆயிரத்து 439 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.*
*நான்காவது அறிவிப்பாக*
*புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்ககு முன்பாகவே நியமிக்கப்பட்ட 470 ஆசிரியர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு கிறிஸ்துமஸ்துக்குள்ளாக அதற்கான ஆணைகள் வழங்கப்படும்.*
ஊடகப்பிரிவு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:
Post a Comment